புறநானூறு



பாடல் எண் 189



புறநானூறு :

பாடல் எண் 186.

பாடியவர் : மோசிகீரனார்.

திணை : பொதுவியல் :

துறை : பொருண்மொழிக்காஞ்சி


"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான்உயிர் என்பது அறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.


அதாவது, இப்பாடலில் 'மண்ணை ஆளும் வேந்தனாக இருந்தாலும் சில கடமைகள் பற்றிய நினைவு அவனுக்கும் இருக்க வேண்டும்' என்று புலவர் மோசிகீரனார் உணர்த்துகிறார்.

பாடலின் பொருளைப் பாருங்களேன்! மக்களுக்கு உணவு நெல்மணிகள்; அவர்கள் நீரையும் பருகி உயிர் வாழ்பவர்கள். எனினும், நெல்லும் நீரும் அவர்களுக்கு உயிர் அன்று; மன்னன்தான் அவர்களுக்கு உயிர்!

ஒவ்வொரு மன்னனும் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்து கொண்டு நாட்டை ஆள வேண்டும். தன் உயிரைக் காப்பதுபோல் தன் நாட்டுக் குடிமக்களின் உயிரையும் காக்க வேண்டும்.