நூல்களின் சிறப்புப் பெயர்கள் / அடைமொழிகள்



நூல்களின் சிறப்புப் பெயர்கள் ( அடைமொழிகள் )


எட்டுத்தொகை நூல்கள்

1. எட்டுத்தொகை : எண்பெருந்தொகை.

2. நற்றிணை : நற்றிணை நானூறு, தூதின் வழிகாட்டி.

3. குறுந்தொகை : நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு.

4. பதிற்றுப்பத்து : இரும்புக்கடலை.

5. பரிபாடல் : பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு, பொருள்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.

6. கலித்தொகை : கலிகுறுங்கலி, கற்றறிந்தார் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி, அகப்பாடல் இலக்கியம், நூற்றைம்பது கலி.

7. அகநானூறு : அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும்பாட்டு, பெருந்தொகை நானூறு.

8. புறநானூறு : புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு, தமிழர் வரலாற்றுப் பெட்டகம், தமிழர்க் களஞ்சியம், திருக்குறளின் முன்னோடி, தமிழ்க் கருவூலம்.


பத்துப்பாட்டு நூல்கள்

1. திருமுருகாற்றுப்படை : முருகு, புலவராற்றுப்படை.

2. சிறுபாணாற்றுப்படை : சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை.

3. பெரும்பாணாற்றுப்படை : பாணாறு, சமுதாயப்பாட்டு.

4. மலைபடுகடாம் : கூத்தராற்றுப்படை.

5. குறிஞ்சிப்பாட்டு : களவியல் பாட்டு, பெருங்குறிஞ்சி ( நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார் .

6. முல்லைப்பாட்டு : நெஞ்சாற்றுப்படை, முல்லை.

7. பட்டினப்பாலை : வஞ்சி நெடும்பாட்டு ( தமிழ்விடு தூது குறிப்பிடுகிறது ), பாலைப்பாட்டு.

8. நெடுநல்வாடை : பத்துப்பாட்டின் இலக்கியக் கருவூலம், மொழிவளப்பெட்டகம், சிற்பப்பாட்டு, தமிழ்ச் சுரங்கம் ( திரு. வி. க. அவர்கள் குறிப்பிடுகிறார் )

9. மதுரைக்காஞ்சி : மாநகர்ப் பாட்டு ( ச. வே. சுப்பிரமணியம் ), காஞ்சிப்பாட்டு.

( பொருநராற்றுப்படைக்குச் சிறப்புப் பெயர் இல்லை. )


பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

1. நாலடியார் : நாலடி, நாலடி நானூறு, வேளாண் வேதம், திருக்குறளின் விளக்கம்.

2. நான்மணிக்கடிகை : துண்டு, கட்டுவடம்.

3. களவழி நாற்பது : பரணி நூலின் தோற்றுவாய்.

4. திருக்குறள் : திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, முப்பால், பொய்யாமொழி, தெய்வநூல், வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், திருவள்ளுவப்பயன் ( நச்சினார்க்கினியர் ). தமிழ்மாதின் இனிய உயர்நிலை, அற இலக்கியம், அறிவியல் இலக்கியம், குறிக்கோள் இலக்கியம், நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு, பொருளுரை

( மணிமேகலை ).

5. பழமொழி நானூறு : பழமொழி, உலக வசனம்.

6. முதுமொழிக்காஞ்சி : அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி.

7. கைந்நிலை : ஐந்திணை அறுபது.

( பிற நூல்களின் சிறப்புப் பெயர்கள் இல்லை ).


ஐம்பெருங்காப்பியங்கள்

1. சிலப்பதிகாரம் : தமிழின் முதல் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், முத்தமிழ்க் காப்பியம், முதன்மைக் காப்பியம், பத்தினிக் காப்பியம், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் ( தெ. பொ. மீ ., ), புதுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், ஒருமைப்பாட்டுக் காப்பியம், தமிழ்த் தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், போராட்டக் காப்பியம், புரட்சிக் காப்பியம், சிறப்பதிகாரம் ( உ. வே. சா., ).

2. மணிமேகலை : மணிமேகலைத் துறவு, முதல் சமயக் காப்பியம், அறக்காப்பியம், சீர்திருத்தக்காப்பியம், குறிக்கோள் காப்பியம், புரட்சிக் காப்பியம், சமயக் கலைச் சொல்லாக்கக் காப்பியம், கதைக் களஞ்சியக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், இயற்றமிழ்க் காப்பியம், துறவுக்காப்பியம்.

3. சீவக சிந்தாமணி : மணநூல், முக்திநூல், காமநூல், மறைநூல், முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள், இயற்கை தவம், முதல் விருத்தப்பாக் காப்பியம், சிந்தாமணி, தமிழ் இலக்கிய நந்தாமணி.

4. குண்டலகேசி : அகல கவி, குண்டலகேசி விருத்தம்.


இன்னும் சில நூல்களின் சிறப்புப்பெயர்கள்

1. இயற்கை ஓவியம் : பத்துப்பாட்டு.

2. இயற்கை இன்பக்கலம் : கலித்தொகை.

3. இயற்கை வாழ்வில்லம் : திருக்குறள்.

4. இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை.

5. இயற்கைத் தவம் : சீவகசிந்தாமணி.

6. இயற்கைப் பரிணாமம் : கம்பராமாயணம்.

7. இயற்கை அன்பு : பெரியபுராணம்.

8. இயற்கை இறையருள் : தேவாரம், திருவாசகம், திருவாய்மொழிகள். 9. திருப்பாவை : பாவைப்பாட்டு.

10. திருவாய்மொழி : திராவிடவேதம்.

11. பெரியபுராணம் : அறுபத்து மூவர் புராணம், திருத்தொண்டர் புராணம்.

12. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் : திராவிட வேதம், வைணவர்களின் தமிழ் வேதம்.

13. திருமந்திரம் : தமிழ் மூவாயிரம்.

14. கருணாமிர்த சாகரம் : இசைப் பேரிலக்கணம்.

15. மூதுரை : வாக்குண்டாம்.

16. வெற்றிவேற்கை : நறுந்தொகை.

17. நேமிநாதம் : சின்னூல்.

18. ஏலாதி : குட்டித் திருக்குறள்.

19. திருக்கயிலாய ஞான உலா : ஆதியுலா, ஞான உலா.

20. பன்னிரு பாட்டியல் : வெண்பாப் பாட்டியல்.

21. சிவஞான போதம் : பேருரை : சிவஞான மாபாடியம்.

22. இலக்கண விளக்கம் : குட்டித் தொல்காப்பியம்.

23. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி : குட்டித் திருவாசகம்.

24. பெருங்கதை : கொங்குவேளிர் மாக்கதை.

25. கம்பராமாயணம் : வழிநூல்.

26. நீலகேசி : நீலம், நீலகேசித் தெருட்டு.

27. கலிங்கத்துப் பரணி : தென்தமிழ்த் தெய்வப்பரணி.

28. திருக்கோவையார் : இராசாக் கோவை.

29. குறவஞ்சி : குறம், குறவஞ்சி நாடகம், குறவஞ்சி நாட்டியம்.

30.உலா : உலாப்புறம்.

31. தாயமானவர் பாடல்கள் : தமிழ்மொழியின் உபநிடதம்.