இலக்கண வினாக்கள்
இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களைக் கூறும் தொல்காப்பியம் முதலான நூல்களின் சிறப்புத் தகவல்களைக் காணலாம்.
1. தொல்காப்பியத்தின் காலம் : 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
2. தொல்காப்பியத்திலுள்ள இயல்கள் : 27.
அதிகாரங்கள் : எழுத்து, சொல், பொருள்.
ஒவ்வோர் இயலிலும் ஒன்பது இயல்கள் உள்ளன. எனவே, 27 இயல்கள் காணப்படுகின்றன.
3. இறையனார் அகப்பொருள் உரையை இயற்றியவர் : இறையனார்.
4. இறையனார் அகப்பொருள் உரையில் உள்ளவை : தொல்காப்பியத்தில் ,
அகத்திணையியல்,
களவியல்,
கற்பியல்,
பொருளியல்
ஆகியவற்றில் 200 நூற்பாக்களுக்கும் மேல் அகப்பொருளைத் தொகுத்து நெறிப்படுத்தி 60 நூற்பாக்களில் உருவான நூல் ஆகும்.
5. இறையனார் அகப்பொருள் உரையின் வேறு பெயர் : இறையனார் களவியல் உரை. / காலம் : கி. பி. ஏழாம் நூற்றாண்டு.
6. தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் : ஏழு.
7. ஐந்திலக்கணம் என்பன: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
8. தொல்காப்பியர் காலத்தில் இருந்த இலக்கணங்கள் : எழுத்து, சொல், பொருள்.
9. நம்பியகப்பொருளின் ஆசிரியர் : நாற்கவிராச நம்பி.
( பாண்டிநாட்டுப் புளியங்குடியைச் சேர்ந்தவர். / சமயம் : சமணம்.
10. நாற்கவிராச நூலின் பெயர் : அகப்பொருள் விளக்கம்.
11. நம்பியகப்பொருளில் உள்ள இயல்கள் : 5
அகத்திணையியல்,
களவியல்,
வரைவியல்,
கற்பியல்,
ஒழிபியல் ஆகியன ஆகும்.
12. தஞ்சைவாணன் கோவையை மேற்கோளாகக் காட்டும் நூல்: நம்பியகப்பொருள்.
13. மாறன் அகப்பொருள் எழுதியவர் : திருக்குருகைப் பெருமாள் கவிராயர். / சமயம் : வைணவம்.
14. மாறன் அகப்பொருளுக்கு இலக்கியமாக விளங்குவது 'திருப்பதிக்கோவை' ஆகும்.
15. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் : ஐயனாரிதனார்.
16. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணைகள் : பன்னிரண்டு.
17. வெட்சி - நிரை கவர்தல்.
கரந்தை - மீட்டல்.
வஞ்சி - நாடு பிடிக்கப் படை எடுத்தல்.
காஞ்சி - உறுதியுடன் நிற்றல்.
நொச்சி - கோட்டையைக் காத்தல்.
உழிஞை - கோட்டையை முற்றுகை இடுதல்.
தும்பை - போரிடல்.
வாகை - வெற்றி.
பாடாண் - கொடை, கல்வி முதலியன.
பொதுவியல் - விடுபட்டவை.
18. யாப்பருங்கலம் மற்றும் யாப்பருங்கலக் காரிகையை இயற்றியவர் : அமிர்தசாகரர். / ஊர் : தீபங்குடி.
19. கலம் என்றால் 'நூற்பாக்களால் ஆனது' என்று பொருள்.
20. யாப்பருங்கலக்காரிகை அமைப்பு : 44 கட்டளைக் கலித்துறைகளால் ஆனது.
21. யாப்பருங்கலக் காரிகையின் இயல்கள் : மூன்று
உறுப்பு,
செய்யுள்,
ஒழிபு.
22. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் : தண்டி.
23. தண்டியலங்காரத்தின் மூலநூல்: வடமொழி தண்டியின் 'காவ்ய தரிசனம்' ஆகும்.
24. தண்டியலங்காரத்தின் இயல்கள் : மூன்று
பொதுவணியியல்,
பொருளணியியல்,
சொல்லணியியல்.
25. மாறன் அலங்காரம் எழுதியவர் : மாறன் அகப்பொருள் எழுதிய திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆவார்.
26. வீரசோழியம் எழுதியவர் : புத்தமித்திரர். / ஊர்: பொன்பற்றி
27. வீரசோழியம் கூறும் இலக்கணம் : ஐந்திலக்கணங்கள்.
28. இலக்கண விளக்கத்தை எழுதியவர் : வைத்தியநாத தேசிகர்.
/ ஊர் : திருவாரூர்.
29. 'குட்டித் தொல்காப்பியம்' எனப்படும் நூல் : இலக்கண விளக்கம்.
30. தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் ஆவார்.
31. முத்து வீரியம் என்னும் நூலின் ஆசிரியர் : முத்து வீரிய உபாத்தியாயர்.
32. நன்னூலின் ஆசிரியர் : பவணந்தி முனிவர் / ஊர் : சனகாபுரம். / தந்தையார் : சன்மதி முனிவர்.
33. நன்னூலை இயற்ற வேண்டுகோள் வைத்தவர் : குறுநில மன்னன் சீவகங்கன்.
34. நேமிநாதம் எழுதியவர்: குணவீர பண்டிதர்.
35. நேமிநாதம் கூறுவன :
தமிழ்,
எழுத்து,
சொல் பற்றிய இலக்கணங்கள்.
36. நேமிநாதம் என்னும் பெயர்க்காரணம் : குணவீர பண்டிதரின் ஆசிரியர் பெயர்.
37. 'சின்னூல்' என்றழைக்கப்படுவது 'நேமிநாதம்' ஆகும்.
38. வச்சணந்தி மாலையின் ஆசிரியர் : குணவீர பண்டிதர். / நூலின் வேறு பெயர் : வெண்பாப் பாட்டியல்.
39. பாட்டியல் நூல் என்பதன் பொருள் : பாட்டியல் என்பது ஐந்திலக்கணத்தில் ஒரு கூறு அன்று; அதன் ஒழிபியல் போன்றது.
40. நிகண்டு நூல்கள் என்றால் 'அகராதிகள்' என்று பொருளாகும்.
41. சேந்தன் திவாகர நிகண்டை எழுதியவர் : திவாகரர் ஆவார். / இடம்பெற்றுள்ள சொற்கள் : 9500.
42. 'பிங்கல நிகண்டு' எழுதியவர் : திவாகரரின் மகன் பிங்கலன். / இடம்பெற்றுள்ள சொற்கள் 15791.
43. உரிச்சொல் நிகண்டை எழுதியவர் : காங்கேயர்.
44. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் : பெருமண்டூர் மங்கலபுருடர் ஆவார்.
45. பன்னிரு படலத்தைத் தழுவி எழுந்த நூல் : புறப்பொருள் வெண்பா மாலை.
46. பன்னிரு படலம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலை : இவற்றின் காலம் : பல்லவர் காலம்.
47. வீரசோழியம் : வீரசோழன் ( வீர ராஜேந்திரன் ) என்ற மன்னன் நினைவால் எழுதப்பட்டது.
48. வீரசோழியத்திற்கு உரை எழுதியவர் : பெருந்தேவனார்.
49. வீரசோழியத்தின் ஆசிரியர் : புத்தமித்திரர். / சமயம் : பெளத்த மதம்.
50. நேமிநாதத்தின் மறுபெயர் : சின்னூல் என்பது ஆகும்.
51. தஞ்சைவாணன் கோவையின் நானூறு செய்யுள்களும் உதாரணமாகக் காட்டப்பட்டுள்ள இலக்கண நூல் :
நம்பி அகப்பொருள். ( அகப்பொருள் விளக்கம் ).
52. யாப்பருங்கலம் எழுதியவர் : அமிர்தசாகரர்.
53. யாப்பருங்கலத்திற்கு உரை வகுத்தவர் : குணசாகரர் ஆவார்.
54. உரிச்சொல் நிகண்டை எழுதியவர் : காங்கேயர்.
55. 'இலக்கணக் கொத்து' என்னும் நூலை இயற்றியவர் : சுவாமிநாத தேசிகர்.
56. "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்ற கருத்து இடம்பெறும் நூல்: நன்னூல்.
57. நன்னூலுக்கு முதன்முதலில் உரை வகுத்தவர் : மயிலைநாதர். / விருத்தப்பாவினால் உரை செய்தவர் : ஆண்டிப்புலவர்.
58. அகப்பொருளைப் பேரின்ப விளக்கத்திற்குப் பயன்படுத்திய கோவை : திருக்கோவை.
59. பிரபந்த மரபியல் என்பது : ஒரு பாட்டியல் நூல் ஆகும்.
60. கட்டளைக்கலித்துறை பெயர் பெறுவது : எழுத்துகளின் எண்ணிக்கையால்!
61. வீரசோழியத்திற்கு உரை எழுதியவர் : பெருந்தேவனார்.
62. நன்னூல் உரையில் ஒவ்வொரு சூத்திரத்தின் கீழும் "பரீட்சாய வினாக்கள்" அமைத்தவர் : ஆறுமுக நாவலர்.
63. அகப்பொருள் விளக்க நூல் மற்றும் அதற்கான உரை எழுதியவர் : நாற்கவிராச நம்பி.
64. 'களவியற்காரிகை என்று நூலின் பெயரை இட்டவர் : உ. வே. சாமிநாதையர்.
65. வெண்பாப் பாட்டியலின் மறுபெயர் : வச்சணந்தி மாலை என்பதாகும்.
66. பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது : பன்னிரு பாட்டியல்.
67. 'அறுவகை இலக்கணம்' என்ற நூலின் ஆசிரியர் : உ. வே. சாமிநாத ஐயர்.
68. நுண்பொருள் மாலை நூலின் ஆசிரியர் : திருமேனி இரத்தின கவிராயர்.
69. உரை இல்லாத இலக்கண நூல் : நேமிநாதம்.
70. தலைதடுமாற்றம் என்பது : நூல் குற்றங்களில் ஒன்று.
71. எழுத்து என்பது மொழியியலார் வழி 'ஒலிக்குறிப்பு' ஆகும்.
72. எழுத்துகளின் குறுக்கம் என்பது 'குறைந்து ஒலிப்பது' ஆகும்.
73. உறுப்பின் என்பது பொருள்தரும் மிகச்சிறிய ஒலிக்கூறு.
74. சுட்டிக்கூறா உவமம் என்பது உவம உருபு மறைந்து வருதல் ஆகும்.
75. இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் : தராது.
76. ஈற்றயலடி முச்சீராய் அமைவது : நேரிசை ஆசிரியப்பா.
77. நாடு + யாது என்பது நாடியாது என்று மாறும்.
78. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே" என்று தொடங்கும் பாடலுடன் தொடங்கும் நூல் : புறப்பொருள் வெண்பா மாலை.
79. ஈடு என்பது : வைணவ நூலின் உரை ஆகும்.
80. திவாகரம் என்பது : நிகண்டு நூல் ஆகும்.
81. நெடி மெய்களுக்கு முன்னர் அல்லது மெய்ம்மயக்கங்களுக்கு முன்னர் நெட்டுயிர் ஒற்றுயிர்களாக அதாவது நீகி என்பது நீக்கி என்று மாற்றுவது : பல்லவர் காலத் தமிழில்!.
82. ழகரமெய் யகர மெய்யாக மாறுவது "சென்னைத் தமிழ்" ஆகும். / வட்டார வழக்கு.
83. தமிழ்- இலத்தீன் அகராதியைத் தொகுத்தவர் : வீரமாமுனிவர்.
84. முதல் தமிழ் ஆங்கில அகராதியை எழுதியவர் : பெப்ரீஷியஸ் ஆவார். 85. வற்றுச் சாரியை பற்றிக் கூறும் நூல் : தொல்காப்பியம் ஆகும்.
86. நன்னூலார் கருத்துப்படி வினையாலணையும் பெயர் : மூவிடத்திற்கும் உரியது ஆகும்.
87. அகராதி நிகண்டு ; ஆசிரியர் : ஈசுவர பாரதியார்.
88. இடைச்சொற்கள் ஏழு இயல்புடையவை என்ற கருத்தைக் கூறுவது : தொல்காப்பியம் ஆகும்.
89. தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் குறிப்பிடும் செய்திகளை நன்னூலார் "பெயரியலில்" குறிப்பிடுகிறார்.
90. தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் வேறுபாடு இல்லாத பகுதி : மொழி முதல் எழுத்துகள் ஆகும்.
91. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அகராதி : இலக்கியச் சொல் அகராதி.
92. மாணிப்பாய் அகராதியின் ஆசிரியர் : பண்டித சந்திரசேகரன் ஆவார்.
93. தமிழில் முதலில் கலைச்சொல் தொகுதிகளைத் தயாரித்தவர் : ஃபிஷ்கிரின் ஆவார்.
94. பல்பொருள் சூடாமணி நிகண்டு ஆசிரியர் : ஈசுவர பாரதியார்.
95. தமிழ்மொழியின் முதல் நிகண்டின் ஆசிரியர் : திவாகரன்.
96. தொல்காப்பியரால் கூறப்பட்டு நன்னூலாரால் கூறப்படாத இலக்கணக் கூறுகள் : வேற்றுமைப் பொருள் மயக்கம்.
97. தொல்காப்பியர் கூற்றுப்படி 'கள்' விகுதி : அஃறிணைக்கு மட்டுமே உரியது.
98. மன் இடைச்சொல் தொல்காப்பியத்தில் :
கழிவு,
ஆக்கம்,
ஒழிபிசைப் பொருள்களில் வரும்.
99. காக்கை என்பதில் உள்ள குறிப்பு : மெய்ம்மயக்கம்.
100. வினைச்சொல் காட்டி நிற்பது : காலம்.
101. கபிலரது நூலைக் 'கபிலன்' என்று கூறுவது : ஆகுபெயர்.
102. உயர்திணைப் பெயர்ச்சொல் அண்மை விளி ஏற்கும்பொழுது : அளபெடை பெறும்.
103. அஃறிணைப் பெயர் விளி ஏற்கும்பொழுது : ஏகாரம் பெறும்.
( பூனையே, கிளியே... )
104. அசைச்சொல் என்பது : வினைச்சொல்.
105. செய்யுளுக்கு இலக்கணம் வகுத்த நூல் : தொல்காப்பியம்.
106. தேமா, புளிமா. கருவிளம், கூவிளம் : இவற்றில் இறுதியில் 'கனிச்சீர் வருவது : கலிப்பாவில்.
107. உரிச்சொல் என்பது : பெயரடை.
108. தொல்காப்பிய சூத்திரவிருத்தி : நூலின் ஆசிரியர் : சிவஞான முனிவர்.
109. இலக்கணக் கொத்து : நூலாசிரியர் : சாமிநாத தேசிகர்.
110. 'இலக்கண விளக்கம்' என்ற நூலுக்கு மறுப்பாக எழுந்த நூல் : இலக்கண விளக்கச் சூறாவளி ஆகும்.